லண்டன், இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த கசப்புணர்வை மாற்றி, உறவை புதுப்பிக்கும் நோக்கில் மன்னர் 3-ம் சார்லஸ் (வயது 77) தனது இளைய மகன் இளவரசர் ஹாரியை நேரில் சந்தித்துப் பேசினார். லண்டனின் ஹைக்ரோவ் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கடந்த 2020-ல் அரச பதவிகளைத் துறந்து ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறியதால் குடும்பத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இந்நிலை யில், தற்போது லண்டன் வந்துள்ள ஹாரி, தனது மனைவி மேகன் மற்றும் குழந்தைகளான ஆர்ச்சி, லிலிபெட் ஆகியோருடன் மன்னரை சந்தித்தார். கடந்த 2022-ல் மகாராணி எலிசபெத்தின் பவள விழாக் கொண்டாட்டத்திற் குப் பிறகு, சுமார் 4 ஆண்டுகள் கழித்துத் தனது பேரக்குழந்தைகளை நேரில் கண்ட மன்னர் சார்லஸ் நெகிழ்ச்சியடைந்தார். அரச குடும்பத்தின் இந்த திடீர் சமரச முயற்சி இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/reconciliation-in-the-british-royal-family-king-meets-grandchildren-after-four-years




