சென்னை, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280-ம், கிராமுக்கு ரூ.160-ம் அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,880-க்கும் ஒரு கிராம் ரூ.13,360-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்த நிலையில், மாலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-second-time-in-a-day-whats-the-status




