ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ரோடு ரயில் நிலையப் பகுதியில் தனிப்படை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு ரயிலிலிருந்து இறங்கிவந்து வாகனத்துக்காக காத்திருந்த 4 பேரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால், அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடமிருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் 14 கஞ்சா பார்சல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், 4 பேரும் ஒடிசாவைச் சேர்ந்த பவுர்ணமி நாயக், ஹஸ்பினா நாயக், அமித் நாயக், பிஜாய் நாயக் எனத் தெரியவந்தது. கஞ்சாவை கடத்திவந்து தமிழ்நாட்டில் விற்க முயன்றதாகவும் தெரியவந்ததையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 28 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா இதேபோல், வேலூர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார், காட்பாடி ரயில் நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வடமாநில இளைஞனைப் பிடித்து சோதனை செய்தபோது, 8 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில், ஒடிசாவைச் சேர்ந்த தீபக் பத்ரா என்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் அந்த இளைஞனையும் கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/36-kg-of-ganja-smuggled-by-train-5-people-from-odisha-arrested




