தேவையான பொருட்கள்: கடலை மாவு - 1 கப், சர்க்கரை - ¾ கப், தண்ணீர் - ¼ கப், ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை, உணவு வண்ண எசன்ஸ் (விருப்பத்திற்கு) - சிறிதளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு, நெய் - 1 டேபிள்ஸ்பூன், முந்திரி - தேவையான அளவு, உலர்ந்த திராட்சை - தேவையான அளவு, ஏலக்காய் - 3 முதல் 4, கிராம்பு - 2 முதல் 3. செய்முறை: முதலில் கடலை மாவுடன் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். விருப்பமிருந்தால் சிறிதளவு உணவு வண்ண எசன்ஸ் சேர்த்து கலக்கலாம். வண்ணம் சேர்க்க விருப்பமில்லையெனில் இயல்பான நிறத்திலேயே செய்யலாம். ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய் மற்றும் கிராம்பை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெயை காயவைத்து, பூந்தி ஜல்லிக்கரண்டியில் மாவை ஊற்றி சிறிய முத்துக்களாக எண்ணெயில் விழச் செய்து, மொறுமொறுப்பாக பொரித்து எடுத்து வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து காய்ச்சி, ஒரு கம்பி பதம் வரும் வரை சர்க்கரை பாகு தயாரிக்கவும். தயாரான சர்க்கரை பாகில் பொரித்த பூந்தியை சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து மெதுவாக கலக்கவும். சுவையான, மணமான இனிப்பு பூந்தி தயார். தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் செய்து குடும்பத்தினருடன் சுவைத்து மகிழலாம். பூந்தி மொறுமொறுப்பாகவும் உதிரியாகவும் வர வேண்டுமெனில், சர்க்கரைப் பாகு ஒரு கம்பி பதத்தில் இருப்பது அவசியம். மேலும், பாகு சூடாக இருக்கும் போதே பூந்தியை சேர்த்து மெதுவாக கிளறினால் ஒவ்வொரு பூந்தியும் பாகை நன்றாக உறிஞ்சி சுவையாக இருக்கும். "வீட்டிலேயே மொறுமொறுப்பான காராச்சேவு. கடைக்கே சவால் விடும் சுவை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/ampstories/photo-story/homemade-sweet-boondi-kids-favorite




