சமையலில் சில நேரங்களில் கூட்டு, குழம்பு, மாவு போன்றவை எதிர்பாராத விதமாக நீர்த்துவிடும். அப்படிப்பட்ட சமயங்களில் உதவும் சில எளிய சமையல் குறிப்புகள் இதோ. கூட்டு, குழம்பு நீர்த்துவிட்டால்: சிறிதளவு பொட்டுக்கடலை மாவு அல்லது அரிசி மாவை தண்ணீரில் கரைத்து சேர்த்து கொதிக்க விட்டால் கெட்டியாகி சுவையும் அதிகரிக்கும். அடை மாவு நீர்த்துவிட்டால்: சிறிதளவு கார்ன்பிளேக்ஸ் தூள் சேர்த்துக் கலந்தால் மாவு சரியான பதத்திற்கு வந்துவிடும். குருமா நீர்த்துவிட்டால்: ஒரு கைப்பிடி அளவு நொறுக்கிய நூடுல்ஸ் அல்லது சிறிதளவு சோளமாவைக் கரைத்து சேர்த்து கொதிக்க வைத்தால் கெட்டியான பதம் கிடைக்கும். கோதுமை அல்வா அல்லது மைதா அல்வா நீர்த்துவிட்டால்: சிறிதளவு சோளமாவை கரைத்து சேர்த்து கிளறினால் அல்வா கெட்டிப்பட்டு சுவையும் மேம்படும். பொங்கல் நீர்த்துவிட்டால்: வறுத்த ரவை அல்லது அவலை பொடித்து சேர்த்து நன்றாக கிளறினால் சரியான பதம் கிடைக்கும். தோசை மாவு நீர்த்துவிட்டால்: 2 ஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவை சிறிது பாலில் கலந்து மாவில் சேர்த்தால் கெட்டியாகும். புளிப்பும் அதிகரிக்காது. பாயசம் அல்லது சேமியா உப்புமா நீர்க்க இருந்தால்: பருப்பு அல்லது ஜவ்வரிசி பாயசத்தில் சோளமாவு அல்லது பால் பவுடர் கரைத்து சேர்க்கலாம். சேமியா உப்புமாவில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறினால் பதம் சரியாகும். சாதம் உதிரியாக இருக்க: சாதம் வெந்தவுடன் சில துளி எலுமிச்சைச் சாறு சேர்த்து மெதுவாக கிளறினால் சாதம் ஒன்றோடொன்று ஒட்டாமல் உதிரியாக இருக்கும். சுவையான தயிர் இட்லி செய்வது எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/ampstories/photo-story/dont-waste-watery-food-8-easy-tips-to-thicken




