சோனம் வாங்சுக்கின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என பேசி நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை எதிர்த்து, கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக் அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ளவில்லை எனவும், அங்கிருந்தபடி போராட்டத்தை அவர் தொடர்வதாகவும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி தற்போது அறிவித்துள்ளது. இந்த நிலையில், சோனம் வாங்சுக் குறித்து நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார். அதில் “நீட் தேர்வு சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக தில்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்கின் நியாயமான கோரிக்கைகளைப் புரிந்துகொண்டு ஒன்றிய அரசு ஆவண செய்யுமாறு இந்திய ஒன்றியத்தின் குடிமகன் என்ற முறையில் கோரிக்கை வைக்கிறேன். சோனம் வாங்சுக்கின் போராட்டம் வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். சோனம் வாங்சுக்கின் தொடர்ச்சியாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கேவும் உண்ணாவிரதத்தில் இருக்கப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பயணம் திட்டமிட்டபடி நடக்கும் என்று அபிஜீத் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/i-wish-sonam-wangchuk-success-in-her-struggle-actor-sathyaraj




