திரைத்துறையினரின் வாழ்த்துகளுக்கும், ரசிகர்களின் பேராதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா இன்று தனது நன்றியை அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு நீங்கள் காட்டிய அனைத்து அன்பு, மரியாதை மற்றும் பாசத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் ‘பட்டாம்பூச்சி’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கென் எழுதிய ‘வெட்டிங் சாங்’ பாடலை சூர்யா பாட, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யா குடும்பக் கதையில் நடித்திருப்பதால், படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் முதல் நாள் வசூல் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.27.51 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மட்டும் ரூ.6.75 கோடி வசூல் என கூறப்படுகிறது. திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், தமக்குக் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்காக நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 'சஞ்சய் விஸ்வநாத்' சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீரரான 'சஞ்சய் விஸ்வநாத்' என்ற கதாபாத்திரத்தில் சூர்யா தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் நிறைந்த இந்தத் திரைப்படம், சுதந்திர தினத்தை முன்னிட்டு வார இறுதியில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு 'ஃபீல்-குட்' படமாக மாறியுள்ளது. நன்றி தெரிவித்த சூர்யா திரைத்துறையினரின் வாழ்த்துகளுக்கும், ரசிகர்களின் பேராதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா இன்று தனது நன்றியை அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு நீங்கள் காட்டிய அனைத்து அன்பு, மரியாதை மற்றும் பாசத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார். சூர்யாவின் இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-suriya-expresses-gratitude-for-the-film-vishwanath-and-sons




