புதுடெல்லி, வைபவ் சூர்யவன்ஷி தற்போது இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய இளம் திறமைகளில் ஒருவர். 15 வயதில் இந்திய டி20 அணிக்கு அழைக்கப்பட்ட அவர், 2026-ல் தனது சர்வதேச டி20 அறிமுகத்தையும் செய்தார். அதற்கு முன் ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல்-ல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 35 பந்துகளில் சதம் அடித்து மிகப்பெரிய சாதனை படைத்திருந்தார். இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி தொடர்பாக அவரது பயிற்சியாளர் மனிஷ் ஓஜா கூறியதாவது, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில், சூர்யவன்ஷி ஒவ்வொரு பந்தையும் அதிரடியாக அடிக்க முயல்கிறார்.ஆனால், புதிய சிவப்பு பந்துக்கு எதிராக அத்தகைய அணுகுமுறை உதவாது. இன்னிங்ஸை எவ்வாறு கட்டமைப்பது என்பதை அவர் கற்றுக்கொள்ள வேண்டும். அவரால் 300 பந்துகளை எதிர்கொண்டு விளையாட முடியும் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும். என தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/he-needs-to-learn-how-to-build-an-innings-pragyan-ojha




