ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுலத்தூர் அருகே பூசேரி பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக சாலையோரம் ஒதுங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-near-ramanathapuram-passengers-injured




