திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, 12-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவியை கர்ப்பமாக்கியதாக 27 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் பலமுறை உறவில் இருந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமான நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை கைது செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-youth-arrested-for-impregnating-class-12-student-after-promising-marriage



