பர்மிங்காம், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமன் ஆனது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஹர்ஷ் துபே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் சேர்க்கப்பட்டுள்ள இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்ஷ் துபே, சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். தரம்சாலாவில் நடைபெற்ற தனது அறிமுக போட்டியில் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தி கவனம் ஈர்த்திருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/3rd-odi-harsh-dubey-added-to-the-indian-squad




