புதுடெல்லி, கால்பந்து உலகக் கோப்பையை 5 முறை வென்ற அணியான பிரேசில், அடுத்த மாதம் (அக்டோபர்) இந்தியா வந்து ஒரே ஒரு சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடு கிறது. இந்தியா- பிரேசில் கால்பந்து அணிகள் முதல்முறை யாக மோதும் இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் அக்டோபர் 3-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. ஆஸ்திரேலியா சென்று வருகிற 25, 29-ந் தேதிகளில் இரண்டு நட்புறவு போட்டிகளில் ஆடும் பிரேசில் அணி, அந்த தொடர் முடிந்ததும் நேரடியாக இந்தியா வருகிறது. தரவரிசையில் 138-வது இடத்தில் உள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான பிரேசில் கால்பந்து அணியை பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி நேற்று அறிவித்தார். சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் 4 கோல்கள் அடித்த வினிசியஸ் ஜூனியர், முன்கள நட்சத்திரம் ரபின்யா. அதிக அனுபவம் வாய்ந்த மார்கினோஸ் உள்பட 26 வீரர்கள் அணியில் இடம் பிடித் துள்ளனர். பிரேசில் அணி வருமாறு:- கோல் கீப்பர்கள்: ஹூகோ சோய்சா, பெட்ரோ மொரிஸ்கோ. ஒடாவியோ பின்களம்: ஆர்துர்டியாஸ், டக்ளஸ் சான்டோஸ், கேப்ரியல் மாகல்ஹேயஸ், ஜார், மார்கினோஸ், மாத்யூஜின்ஹோ, மவுரோ ஜூனியர், விடோர் ரெய்ஸ், வெஸ்லி நடுகளம்: ஆந்த்ரே சான்டோஸ், பிரினோ பிடன், புருனோ குய்மராஸ், டேனிலோ சான்டோஸ், டக்ளஸ் லூயிஸ், கேப்ரியல் போன்டெம்போ முன் களம்: என்ட்ரிக் ஸ்டீபன், ஜோவ் பெட்ரோ. பெட்ரோ, ரபின்யா, ரேயான், சாமுவேல் லினோ, வினிசியஸ் ஜூனியர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/football-match-against-india-brazil-squad-announced




