நாளைய பத்திரிகையாளர்களை உருவாக்கும் விகடன் குழுமத்தின் கனவுத் திட்டமான 'மாணவப் பத்திரிகையாளர்' திட்டத்தின் கூட்டுப் பயிற்சி முகாம், ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. மாநிலம் முழுவதிலிருந்தும் தேர்வான 65 மாணவர்கள் இதில் பங்கேற்று, முன்னணி ஆளுமைகளுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பைப் பெற்றனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை, மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார். அண்ணாமலை அப்போது 'உங்க வாழ்க்கையை படமாக எடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். யார் ஹீரோவாக நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் நினைக்கிறீர்கள்?' என்று மாணவப் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு. சிரித்துக்கொண்டே… ”அந்த அளவிற்கு நான் வொர்த் இல்லை என்று நினைக்கிறேன். நான் பெங்களூரில் காவல் துணை ஆணையராகப் பணியாற்றும்போது இரவு ரோந்துப் பணிகளுக்குச் செல்வேன். அப்போது ஒரு காவலருடன் பேசினேன். இரண்டு மணி நேரம் பயணித்து வேலைக்கு வருவதாகக் கூறினார். ‘ஏன் நகர்த்திலேயே வீடு எடுத்து தங்கலாமே, எதற்கு வீணாக அலைகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், ’இல்ல சார் சிட்டிக்குள்ள வாடகைக்கு எடுத்து தங்கினால், வாங்குற சம்பளத்துல 15,000 ரூபாய்க்கு மேல வாடகைக்குப் போயிரும். ஆனா, இப்போ ரெண்டு மணி நேரம் பயணம் என்றாலும் வாடகை குறைவுதான்' என்றார். அவர் நினைத்திருந்தால் கையூட்டு வாங்கி சூழலைச் சமாளித்திருக்கலாம். ஆனால் அவர் நேர்மையுடன் நடந்து கொண்டார். அந்த நேர்மை கொண்டாடப்பட வேண்டியது. அவரைப் போலவே இன்னும் எத்தனையோ நேர்மையான காவலர்கள் இருக்கிறார்கள். நான் காவல் பணியில் இருந்து வெளியே வந்ததும், ‘ஸ்டெப்பிங் பியாண்டு காக்கி’ (Stepping Beyond Khaki) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினேன். உங்களின் எழுத்து அவரைப் போன்ற நேர்மையான காவலர்களைப் படமாக மாற்ற உதவ வேண்டும்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/we-the-leader-annamalai-about-real-hero-police




