புதுடெல்லி, தொடர்ந்து 2 போட்டிகளில் அதிரடி சேசிங் செய்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை படைத்துள்ளது இந்தியா. 2-0 நேற்றுன் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. துரத்திய இந்தியா முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கை இந்திய அணி வெறும் 14.5 ஓவர்களிலேயே எட்டியது. இதன் மூலம் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 150 ரன்களுக்கு மேல் இலக்கை இந்திய அணி அதிவேகமாக துரத்திப் பிடித்த போட்டிகளில் இந்த ஆட்டம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு இதே தொடரின் 1-வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 157 ரன்கள் இலக்கை இந்தியா 13.4 ஓவர்களிலேயே முறியடித்து 2-வது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது ஒயிட்வாஷ் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி, தற்போது தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. தொடரின் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/ind-vs-afg-134-overs-in-the-first-match-145-overs-in-the-second-match-team-indias-new-record




