வாஷிங்டன், ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளம் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்கா-ஈரான் கிழக்கு போர் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் ஈரானுக்கு டிரம்ப் புதிய மிரட்டல் ஒன்றை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்பதே எங்களின் முதன்மை நோக்கமாகும். அவர்கள் அணு ஆயுதத்தை பெற முடியாத வகையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். ஒரு ஈரானின் தளமான பிக்காகஸ் மலைப்பகுதியில் ஏதாவது செயல்பாடுகளை நாங்கள் கண்டறிந்தால் அங்கு நிலத்தடி அணுசக்தி தளம் மீது தாக்குதல் நடத்துவோம். அந்த பகுதியில் உள்ள செயல்பாடுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஈரான் முழுவதும் நடைபெறும் அனைத்தையும் நாங்கள் அறிவோம். தவறு ஏதாவது செய்தால் ஈரான் மீது பலமான தாக்குதல் நடத்தப்படும். அமெரிக்க ராணுவ தலையீடு காரணமாகதான் பெரிய அளவில் மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கவில்லை. இல்லையென்றால் இஸ்ரேல்-மத்திய கிழக்கு பகுதி பெரும் அச்சுறுத்தலை சந்தித்திருக்கும் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/iran-war-is-small-potatoes-for-us-trump-says




