சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் அல்லது பிற அமைப்புகளின் நிர்வாகத்திற்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முயன்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் வகையில், சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றக் கோரி முதலமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``AAI அமைப்பை சென்னை விமான நிலைய நிர்வாகப் பொறுப்பிலிருந்து மாற்றக் கோருவது ஒரு சிறிய நல்ல முயற்சிதான் என்றாலும், அது பிரதானப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வாகாது. தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரத்திற்குப் பொருத்தமான வகையில், சர்வதேசத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் கூடிய ஒரு புதிய விமான நிலையம் சென்னைக்கு மிகவும் அவசியமாகும். பயணிகளின் அனுபவம், உள்கட்டமைப்பு மற்றும் அன்றாடச் செயல்பாடுகள் ஆகியவற்றில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களின் விமான நிலையங்களோடு ஒப்பிடுகையில் நாம் வெகுவாகப் பின்தங்கியுள்ளோம். தற்போதைய சென்னை விமான நிலையத்தின் மோசமான உள்கட்டமைப்பும் அதன் செயல்பாடுகளும் சென்னை நகரத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் செய்யப்படுகின்ற பெரும் துரோகமாகும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``சென்னை விமான நிலையம் தனியார்மயமாகிறதா?" - அமைச்சர் நிர்மல் குமார் பதில் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/governance/karti-chidambaram-has-commented-on-chennai-airport-issue




