கொழும்பு, இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 503 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது. தொடரில் இந்தியா ஆதிக்கம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளில் தொடர்ந்த இந்தியாவின் ஆதிக்கம் 2-வது நாள் ஆட்டத்திலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. 2-வது செஷன் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது டெஸ்ட் சதம் ஆட்டம் மீண்டும் தொடங்கியநிலையில், இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இந்திய அணியின் துருவ் ஜுரெல் அபாரமாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். 115 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், தேவ்தத் படிக்கல் 117 ரன்களும், ரிஷப் பந்த் 63 ரன்களும், சுப்மன் கில் 50 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 43 ரன்களும் எடுத்தனர். தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி 503 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ள நிலையில், இலங்கை அணி தற்போது தனது முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/2nd-test-against-sri-lanka-india-declares-at-503-runs




