தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்காக ஜி.டி. நாயுடு குழுமமும், தினத்தந்தி குழுமமும் இணைந்து நடத்தும் 'தி நெக்ஸ்ட் ஜி.டி. நாயுடு சேலஞ்ச்' மாநில அளவிலான புத்தாக்கப் போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி வரை பதிவு நடைபெற்று, தமிழகம் முழுவதும் உள்ள 165 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து 779 புத்தாக்கத் திட்டங்கள் (Projects) பெறப்பட்டன.இதில் முதல் கட்டத் தேர்வில் தகுதி பெற்ற 36 அணிகள், ஜூலை 2-ஆம் தேதி கோவையில் உள்ள ஜி.டி. அறிவியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பங்கேற்றன. சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற திட்ட விளக்கங்கள் மற்றும் மதிப்பீட்டுக்குப் பிறகு, மூன்று பேர் கொண்ட நடுவர் குழு 12 அணிகளை இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/next-gd-naidu-challenge-reaches-its-final-stage-key-event-takes-place-today




