ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முக்கியமான செயல்களுக்கு பொது WiFi-யை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விமான நிலையங்கள், உணவகங்கள் போன்ற பொது இடங்களில் கிடைக்கும் இலவச WiFi-யில் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைப் பாதுகாப்பாக கையாள வேண்டும். சில பொது WiFi நெட்வொர்க்குகளில் போதிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாம். இதனால் சைபர் குற்றவாளிகள் அவற்றை பயன்படுத்தி பயனர்களின் தகவல்களைத் திருடும் அபாயம் உள்ளது. மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழுவான CERT-In, பொது WiFi பயன்பாடு தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பற்ற நெட்வொர்க்குகளில் முக்கியமான செயல்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது WiFi-யுடன் இணைந்திருக்கும்போது இணைய வங்கி சேவைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமான கணக்குகளில் உள்நுழைவதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பற்ற WiFi இணைப்புகளை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களைத் திருட முயற்சி செய்யலாம். இதனால் தரவு திருட்டு, கணக்கு மோசடி மற்றும் நிதி இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். பொது WiFi பயன்படுத்தும்போது வங்கி விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் கார்டு தொடர்பான தகவல்களை உள்ளிடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமான செயல்களை பாதுகாப்பான தனிப்பட்ட இணைய இணைப்பில் மேற்கொள்வது சிறந்தது. தேவையில்லாத நேரங்களில் WiFi வசதியை ஆஃப் செய்து வைப்பதும், அறிமுகமில்லாத நெட்வொர்க்குகளுடன் தானாக இணைவதைத் தடுப்பதும் பாதுகாப்பை மேம்படுத்தும். பயன்படுத்திய பிறகு பொது WiFi-யிலிருந்து துண்டித்துக்கொள்வதும் நல்ல நடைமுறையாகும். எனவே, இலவச WiFi கிடைக்கிறது என்பதற்காக முக்கியமான பணப் பரிவர்த்தனைகளை அதில் மேற்கொள்ள வேண்டாம். வங்கி சேவை மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் போன்ற செயல்களுக்கு மொபைல் டேட்டா அல்லது நம்பகமான தனிப்பட்ட WiFi-யைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. வீட்டில் துளசி வழிபாட்டின் சிறப்பு என்ன? ஆன்மிக நம்பிக்கைகள் இதோ! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/ampstories/photo-story/dont-make-this-mistake-centre-warns-public-wifi-users




