சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.15,030-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,20,240-க்கும் விற்பனையாகி வருகிறது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு, தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சர்வதேச சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,600 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையின் இந்த உயர்விற்கான காரணத்தைச் சொல்கிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். > அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வட்டி வருவாய் இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்அடுத்தடுத்து பண்டிகை சீசன்; தங்க நகை வாங்க பிளான் இருக்கிறதா? 'இதை' நோட் செய்து வாங்கினால் லாபம்! > போரின் காரணமாக, கச்சா எண்ணெய் விலையில் நிலையற்றத்தன்மை இருந்து வருகிறது. > தற்போது ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா. > உலக வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி குவித்து வருகிறது. > ஆப்ஷன் டிரேடிங், இ.டி.எஃப் போன்றவற்றிலும் உலக முழுவதும் தற்போது தங்கத்தில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். > இறுதியாக, பணவீக்கத்திற்கான அச்சம். இவற்றால் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. உலக அளவில் நிலவும் தற்போதைய சூழலில், தங்கம் விலை இன்னும் உயரும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/personal-finance/gold/gold-price-surges-in-chennai-why-rates-are-rising


