திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் 15 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர். 7 பேர் போக்சோவில் கைது அப்போது திண்டுக்கல் பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி (வயது 45), கிருஷ்ணமூர்த்தி(55), அழகர்(40), பிலால்(39), ஷேக்முஜிபுர்ரகுமான்(51), ரமேஷ்(43), வினோத்குமார்(38) ஆகிய 7 பேர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-minor-girl-raped-7-arrested-under-pocso




