சென்னை, பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். அத்துடன், பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து திமுக பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் திமுகவினருக்கு உடனடியாக பேச வாய்ப்பு மறுத்துவிட்டார். முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதால், அதுகுறித்து பேச திமுகவினருக்கு அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்தார். அப்போது திமுகவினர் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டதால், அனைவரும் வெளியே சென்று கோஷமிடுங்கள் என சபாநாயகர் கூறினார். இதையடுத்து திமுகவினர் உடனடியாக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செந்தனர். மேலும், வெளியே செல்லும்போது 'அனுமதி கொடு, அனுமதி கொடு' என கோஷங்களை எழுப்பினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-members-walk-out-of-the-legislative-assembly




