கொழும்பு, இந்தியா–இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்துள்ளது, தேவதத் படிக்கல் சதமடித்தார். தேவ்தத் படிக்கல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய சாதனை படைத்துள்ளார். முதல் டெஸ்டில் 167 ரன்கள் எடுத்த அவர், இரண்டாவது டெஸ்டிலும் 117 ரன்கள் விளாசி தொடர்ச்சியாக இரண்டு சதங்களை பதிவு செய்தார். இதன் மூலம் இலங்கை மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் இரண்டு சதங்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மேலும், இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் இந்த தொடரில் இதுவரை 2 சதம் உள்பட 328 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட வெளிநாட்டு டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதைைனய படைத்தார். இதற்கு முன்பு 1998-99-ம் ஆண்டு நியூசிலாந்து தொட ரில் இந்தியாவின் ராகுல் டிராவிட் 321 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த 27 ஆண்டு கால சாதனையை படிக்கல் தகர்த்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/2nd-test-against-sri-lanka-padikkal-sets-a-new-record




