சென்னை, சென்னை தாம்பரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல அலுவலக முற்றுகை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டல அலுவலக வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) தூய்மைப் பணியாளர்கள் திரண்டனர். அவர்கள் தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென வளாகத்தின் முன்பு அமர்ந்து போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முக்கிய கோரிக்கைகள்- குற்றச்சாட்டுகள் தங்களுக்கு தற்போது ஒரு நாளுக்கு வெறும் ரூ. 350 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக பணியாளர்கள் குற்றம் சாட்டினர். இதனை உடனடியாக ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் தங்களுக்கு முறையான வார விடுமுறை வழங்கப்படுவதில்லை என்றும், விடுப்பு எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர். இந்த நியாயமான கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பரிசீலித்து, உரிய தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-workers-protest-in-tambaram-demanding-a-salary-hike




