சென்னை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு அதிக மழை தரும் காலமாக வடகிழக்கு பருவமழை காலம் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நிலவுகிறது. இந்த பருவமழை காலத்தின் புயலால் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆண்டுதோறும் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. ஆலோசனைக் கூட்டம் இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாளை (செப்.21) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் நாளை நண்பகல் 12 மணியளவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் கடலோர மாவட்ட கலெக்டர்கள் காணொலி வாயிலாக பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நீர்நிலைகளை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பலவீனமான மின்கம்பங்களை சீரமைத்தல் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-chief-minister-vijay-to-hold-consultations-tomorrow




