தூத்துக்குடி, தூத்துக்குடி அய்யனார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அய்யனார் துணை மின் நிலையத்தில் இன்று (17.7.2026, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை இதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர், ஹவுசிங்போர்டு, குமரன்நகர், காமராஜ்நகர், டேவிஸ்புரம், சாகிர்உசேன்நகர், சுனாமிநகர், நேரு காலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோயில்பிள்ளைவிளை, ஆரோக்கியபுரம், T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜபாளையம், சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம். மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், பனையூர், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், ஆனந்தமாடன்பச்சேரி, வாலசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தையார் காலனி, வெற்றிவேல்புரம் மற்றும் ராமர்விளை ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-today-4




