சென்னை, அரசு விரைவு பஸ் டிக்கெட் முன்பதிவுக்கான மொபைல் போன் செயலியின் வடிவமைப்பு. சிவப்பு, மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 1,100க்கும் மேற்பட்ட சொகுசு மற்றும் 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதர போக்குவரத்து கழகங்களும், 1,500க்கும் மேற்பட்ட விரைவு பஸ்களை இயக்குகின்றன. மொபைல் போன் செயலி இந்த விரைவு பஸ்களுக்கு, 90 நாட்களுக்கு முன்பே என்ற இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலி வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியை, மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து, முன் பதிவு வசதியை பயன்படுத்தலாம். சிவப்பு, மஞ்சள் நிறத்தில் மாற்றம் த.வெ.க., அரசு வந்த பின், புதிதாக தயாராகி வரும் அரசு பஸ்களுக்கு, த.வெ.க., கொடி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு வருகிறது. தற்போது, அரசு விரைவு பஸ் டிக்கெட் முன்பதிவுக்கான மொபைல் போன் செயலியின் வடிவமைப்பும். சிவப்பு, மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/color-change-in-the-government-express-bus-app-new-design-in-the-colors-of-the-tvk-flag




