உங்களுக்கு 50+ வயசா? அல்லது 50-ஐ நெருங்க இருக்கிறீர்களா? பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கும்போது, மொத்த பணத்தையும் Lumpsum-ஆக ஒரே நேரத்தில் முதலீடு செய்ய பயமாக இருக்கிறதா? உங்களுக்குத் துணையாக வரப்போகிறது STP (Systematic Transfer Plan). STP என்றால் என்ன? (ஒரு எளிய உதாரணம்) ஒரு பெரிய தொகையை ஒரே நாளில் பங்குச்சந்தையில் போடுவதற்குப் பதிலாக, முதலில் அதை ஒரு பாதுகாப்பான Debt Fund அல்லது Liquid Fund-ல் முதலீடு செய்கிறோம். அங்கிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தானாகவே Equity Fund (பங்குச் சந்தை நிதி)-க்கு மாற்றுவதுதான் STP. இது தக்காளி விலை ஏறும்போது கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவதைப் போன்றதுதான்! இதனால் உங்களுக்குக் கிடைக்கும் 3 நன்மைகள்: சந்தை வீழ்ச்சி உங்களுக்குச் சாதகம்: சந்தை உச்சத்தில் இருக்கும்போது குறைவான யூனிட்களும், சந்தை கீழே விழும்போது அதிகமான யூனிட்களும் கிடைக்கும். இதனால் முதலீட்டின் சராசரி செலவு குறைந்து, லாபம் கூடும் (Rupee Cost Averaging). அமைதியான தூக்கம்: "நாளைக்குச் சந்தை விழுந்துடுமோ?" என்ற பயமே வேண்டாம். சந்தையின் ஏற்ற இறக்கங்கள் உங்களைப் பாதிக்காது. உங்கள் 50களில் மன அமைதி மிக முக்கியம். இரட்டை லாபம்: மொத்தப் பணமும் டெப்ட் ஃபண்டில் இருப்பதால், அது ஈக்விட்டிக்கு மாறும் வரை உங்களுக்கு 6-7% வரை வளர்ச்சி வருவாய் கிடைத்துக் கொண்டே இருக்கும். Systematic Transfer PlanPersonal Loan EMI-யை கட்ட தவறினால் என்ன ஆகும் தெரியுமா? இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க! உங்களது சாதகமாக STP-யை எப்படிப் பயன்படுத்துவது? 50+ வயதினருக்கான உத்தி: உங்கள் மொத்த பணத்தை (உதாரணமாக 10 லட்சம்) லிக்விட் ஃபண்டில் போடுங்கள். கால அளவு: அடுத்த 12 முதல் 24 மாதங்களுக்கு STP-யை செட் செய்யுங்கள். இதன் மூலம் சந்தையின் சுழற்சியை (Market Cycle) பயன்படுத்திக் கொள்ள முடியும். வளர்ச்சிக்கான வழி: 60 வயதை எட்டும்போது, இந்த முதலீடு நல்ல லாபத்தைத் தந்து, உங்கள் ஓய்வூதியக் காலத்திற்குப் பெரிய பக்கபலமாக மாறும். சந்தைச் சரிவைக் கண்டு பயப்படாதீர்கள்; அது உங்களுக்கு மலிவான விலையில் பங்குகளை வாங்குவதற்கான அரிய வாய்ப்பு. STP மூலம் அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துங்கள்! Mutual fund investment 60 வயதில் ₹1 கோடி கார்ப்பஸ் + மாத பென்ஷன் பெற. உங்களுக்கு 50 வயது ஆகிறதா. அடுத்த 10 ஆண்டுகள் உங்களால் முதலீடு செய்ய முடியுமா? 12% ஆண்டு வருவாயில் உங்களால் ₹ 1 கோடி சேர்க்க எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைக் கீழே காணலாம்! ₹ 5 லட்சம் லம்ப்சம் + ₹26000 SIP = ₹1 கோடி ₹ 10 லட்சம் லம்ப்சம் + ₹22000 SIP = ₹1 கோடி ₹ 20 லட்சம் லம்ப்சம் + ₹14500 SIP = ₹1 கோடி ₹ 30 லட்சம் லம்ப்சம் + ₹6500 SIP = ₹1 கோடி ₹40000 மாத பென்ஷன் பெறலாம்! இந்த ₹1 கோடி தொகையில் இருந்து, அடுத்த 40 ஆண்டுகள் நீங்கள் ₹40,000 ரூபாயை மாத வருமானமாகப் பெறலாம். வருடா வருடம் 6% அதிகப்படுத்தி இந்தத் தொகையை எடுத்த பின்னரும், உங்கள் சந்ததிக்கு விட்டுச் செல்ல கையில் 1.6 கோடி ரூபாய் இருக்கும். தேவையான பணத்தை மட்டும் பென்ஷனாகப் பெற்று மீதி பணத்தை அப்படியே முதலீடு செய்திருப்பதால், இது முற்றிலும் சாத்தியமே! ₹1 கோடி நிதி + மாத பென்ஷன் வேண்டுமா? Lumpsum + SIP முதலீடு செய்வது எப்படி? 50 வயதில் கவனிக்க வேண்டிய முதலீட்டு விஷயங்கள் என்னென்ன? செய்யக்கூடாத தவறுகள் என்ன? சரியான முறையில் முதலீடு செய்வது எப்படி? அனைத்தையும் அறிந்துகொள்ள, வரும் புதன், ஜூலை 22, மாலை 7 மணிக்கு நடைபெறும், '₹1 கோடி கார்ப்பஸ் + பென்ஷன்' - 50+ வயதினருக்கான முதலீடு வழிகாட்டலில் கலந்துகொள்ளுங்கள். முன்பதிவு செய்ய: Vikatan Wealth Pvt. Ltd. | AMFI Registered Mutual Funds Distributor | ARN - 310095 | labham.money 'லாபம்' மூலம் Lumpsum முதலீடு செய்ய: மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சந்தை அபாயங்களை உட்பட்டது. முதலீடு செய்யும் முன் ஆவணங்களைப் படிக்கவும். Personal Finance: இந்த மாதிரி பட்ஜெட் போட்டா, 10 வருஷத்துல ₹23 லட்சம் சேர்க்கலாம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/personal-finance/how-to-safely-invest-lumpsum-when-you-are-50-years-old




