நத்தம், 10-வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆஷிக்கின் அதிரடியில் 205 ரன்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணியில் கே. ஆஷிக் அதிரடியாக விளையாடி 56 பந்துகளில் 98 ரன்கள் குவித்து, வெறும் 2 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அவரது சிறப்பான ஆட்டத்தால் சேப்பாக் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. ரஹேஜா சதம் 206 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணிக்கு துஷார் ரஹேஜா மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட் கீப்பர் துஷார் ரஹேஜா 52 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 102 ரன்கள் குவித்து அசத்தினார். அபார வெற்றி மறுமுனையில் பிரதோஷ் ரஞ்சன் பால் 41 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்தார். இருவரின் அதிரடியால் திருப்பூர் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. இதன் மூலம் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 2 ஓவர்கள் மீதமிருக்க, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-tushar-rahejas-explosive-century-tiruppur-secures-a-magnificent-victory-defeating-chepauk-by-7-wickets




