சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது குறித்த ஆலோசனை உள்ளிட்ட பிற பணிகள் காரணமாக முதல்-அமைச்சர் விஜய் காலையில் சட்டசபைக்கு வருகை தரவில்லை. இந்த நிலையில், மாலையில் சட்டசபைக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை தந்தார். அப்போது, முதல்-அமைச்சருக்கென ஒதுக்கப்பட்டு இருக்கும் தனது வழக்கமான இடத்தில் அமராமல், அமைச்சர்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டார். குறிப்பாக, அமைச்சர் செங்கோட்டையன் அருகில் அமர்ந்த முதல்-அமைச்சர் விஜய், அவரிடம் சிறிது நேரம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். முதல்-அமைச்சர் விஜய் ஏன் இடம் மாறி அமர்ந்துள்ளார் என அங்கிருந்த பிற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் உற்று கவனித்துக் கொண்டிருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-seated-in-a-different-spot-in-the-legislative-assembly




