புது டெல்லி, தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி.,மாநிலங்களவையில் கழக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, எம்.பி. நோட்டீஸ் அளித்துள்ளனர். நோட்டீஸ் நாடாளுமன்ற தி.மு.க. மக்களவைக்குழு தலைவர் மற்றும் கழக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., மக்களவைச் செயலர் கழக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, எம்.பி., மாநிலங்களவை செயலர் நடைபெற பாராளுமன்ற கூட்ட தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல் நடத்தை விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பிற அலுவல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திடவும் - பின்வரும் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வரவும், மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளர். அதன் விவரம் பின்வருமாறு:- தீர்மானம் "காவிரி ஆற்றின் மீது முன்மொழியப்பட்டுள்ள மேகதாது சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கம் குறித்த கவலைகள், அதனால் பாதிக்கப்படும் மாநிலமான தமிழ்நாட்டின் மீதான அதன் தாக்கம் மற்றும் இது தொடர்பாக ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதன் அவசியம் ஆகிய அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை விவாதித்து தீர்மானத்தை கொண்டு வருதல்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/notice-on-mekedatu-dam-resolution-in-parliament-by-dmk-mps




