ஷென்சென், சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர். இறுதிப்போட்டி சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதன்படி, இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி சீனாவின் ஹி ஜி டிங்-ரென் ஸியாங் யு ஜோடியை எதிர்கொண்டது. சாத்விக்-சிராக் சாம்பியன் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இப்போட்டியில்11-21, 21-13, 21-17 என்ற செட் கணக்கில் சீன ஜோடியை வீழ்த்தி இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முன்பு 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் சீன மாஸ்டர்ஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சாத்விக்-சிராக் ஜோடி தோல்வியை சந்தித்தது. ஆனால், தற்போது முதல் முறையாக சாத்விக்-சிராக் ஜோடி சீன மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/china-masters-indias-satwik-chirag-champions




