அரியலூர், அரியலூர் மாவட்டம் கோடாலியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்ற கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்களின் ஆவேச போராட்டம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் குடியிருப்பு மற்றும் பள்ளி செல்லும் வழிக்கு அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். மதுப்பிரியர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தடுப்புகளை உடைத்தெறிந்த மக்கள் அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது ஆவேசமடைந்த பொதுமக்கள், மதுக்கடைக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அதிரடியாக உடைத்தெறிந்து, கடையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. போக்குவரத்து பாதிப்பு - அதிகாரிகள் பேச்சுவார்த்தை இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் ஜெயங்கொண்டம் - திருச்சி பிரதான சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். "மக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவோ அல்லது மூடவோ உரிய உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/ariyalur-students-and-public-protest-against-tasmac-shop



