நியூஜெர்சி உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசிலை வீழ்த்தி நார்வே அணி காலிறுதிக்கு முன்னேறியது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட் சுற்றுகள்) முடிந்து, 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும். எர்லிங் ஹாலந்து அபாரம் அந்த வகையில், அதிகாலை 1.30 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நியூஜெர்சி மைதானத்தில் நடந்த 3-வது சுற்று போட்டி ஒன்றில் பிரேசில் மற்றும் நார்வே அணிகள் விளையாடின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், 79-வது நிமிடத்தில் நார்வேவின் எர்லிங் ஹாலந்து முதல் கோலை போட்டார். தொடர்ந்து போட்டி முடியும் நேரத்தில் (90-வது நிமிடத்தில்) மற்றொரு கோலை போட்டார். இதனால், 2-0 என்ற கணக்கில் நார்வே அணி முன்னிலை பெற்றது. கூடுதல் நேரத்தில் கோல் கூடுதல் நேரத்தில் பிரேசில் அணிக்கான முதல் கோலை நெய்மர் போட்டார். 2-1 என பிரேசில் அணி 2-ம் இடத்தில் இருந்தது. அதன்பின்னர் கோல் அடிக்கப்படவில்லை. இதனால், நார்வே அணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு முறை பிரேசில் அணிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/football/world-cup-football-norway-beats-brazil-to-advance-to-quarterfinals




