சென்னை, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தினமும் தலைமைச் செயலகம் வந்து அரசுப் பணிகளை கவனிப்பதும், அவ்வப்போது பிற்பகலில் சில இடங்களுக்கு சென்று ஆய்வும் நடத்தி வருகிறார். அந்த வகையில், சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக தலைமை செயலகத்தில் இருந்து ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு காரில் வந்த அவரை மெட்ரோ அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர், அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் முதல்-அமைச்சர் விஜய் பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார். இதையடுத்து நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கிய அவர், அங்குள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். இதைத் தொடர்ந்து, கிண்டி கத்திப்பாரா சென்ற முதல்-அமைச்சர் விஜய், அங்கு நடைபெறும் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் மெட்ரோ பணிகளின் நிலவரம் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-inspected-the-kathipara-metro-work-in-person




