மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து ஹோட்டல் ஊழியர்களும், டெலிவரி பாய்களும் மது அருந்திக்கொண்டு அதிக சத்தத்துடன் பாடல் கேட்டுக்கொண்டிருந்தனர். இது பாடகர் விக்ரம் சிங்கிற்கு இடையூராக இருந்தது. இதையடுத்து தனது வீட்டிற்கு அருகில் அமர்ந்து மது அருந்தவேண்டாம் என்று விக்ரம் சிங் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஹோட்டல் ஊரியர்களும், டெலிவரி பாய்களும் சேர்ந்து விக்ரம் சிங்கை சரமாறியாக அடித்து உதைத்தனர். இதில் விக்ரம் சிங் படுகாயம் அடைந்தார். அவரை அவரது மகன் உடனே மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட பாரத் குமார் (19), பிரமோத் (26), ரம்ஜான் கான் (22), தீபன்சு (21), மோகன் விஸ்வகர்மா (32), விஜய் (36), மன்னு (26) மற்றும் ஒரு வாலிபர் ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள வடகிழக்கு மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், விக்ரம் சிங், தனது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று மது அருந்திக்கொண்டும் கூச்சலிட்டுத் தொந்தரவு செய்துகொண்டும் இருந்ததைக் கண்டு, அவர்களைச் சத்தத்தைக் குறைக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அந்தக் கும்பல் அவரைத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவான, நியாயமான மற்றும் முழுமையான விசாரணை நடைபெறுவதையும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளை அந்த அமைப்பு வலியுறுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/hotel-staff-beat-a-singer-from-manipur-to-death-after-he-objected-to-them-drinking-alcohol-outside-his-home




