கோயம்புத்தூர், அதிமுக பொதுச்செயலாளராக எஸ்பி வேலுமணி வரவேண்டும் என குறிச்சியில் உள்ள குண்டத்து மாகாளியம்மன் கோயிலில் தீ மிதித்த அதிமுக தொண்டர் நேர்த்திக்கடன் கோவை குறிச்சி பகுதியில் பிரசித்தி பெற்ற குண்டத்து மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பூக்குண்டம் இறங்கும் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவில், அதிமுகவை சேர்ந்த தீவிர தொண்டர் ஒருவர் தீ மிதித்தார். வேலுமணிக்கு பதவி இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்பி வேலுமணி, கட்சியின் பொதுச்செயலாளராக உயர்வு பெற வேண்டும் என்று வேண்டி, அந்த தொண்டர் இந்த நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். எஸ்பி வேலுமணியின் உருவப் படத்தை கைகளில் ஏந்தியபடி பக்தி பரவசத்துடன் பூக்குண்டத்தில் இறங்கினார். பதவிகளை ஏற்கப்போவதில்லை கடந்த சில நாட்களாகவே அதிமுக தலைமைக்கும் எஸ்பி வேலுமணி தரப்புக்கும் இடையே உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த புதிய கட்சி பதவிகளை ஏற்கப்போவதில்லை என்று எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பகிரங்கமாக மறுத்துள்ளனர். இந்த பரபரப்பான அரசியல் சூழல்கட்சியின் தலைமை பொறுப்புக்கு எஸ்பி வேலுமணி வரவேண்டும் என தொண்டர் ஒருவர் தீ மிதித்து பிரார்த்தனை செய்துள்ள சம்பவம், கோவை மாவட்ட அதிமுகவினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/devotee-fire-walks-for-sp-velumani-leadership-in-aiadmk




