கரூர் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: இன்று காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஒரு கனத்த மனதுடன்தான் சென்றேன். கரூர் கொடுந்துயர் நிகழ்வில் பாதிக்கப்பட்ட எமது மக்களை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலி, வேதனை, இழப்பு, போராட்டம் அனைத்தையும் உணர்ந்திருக்கிறேன். அரசின் இந்த எளிய ஆதரவு என்பது எமது மக்கள் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கும் என்றாலும் அவர்களின் பேரிழப்பை ஈடு செய்ய முடியாது. அவர்கள் இழந்த உறவுகளை எந்த உதவியாலும் திரும்பக் கொண்டு வர முடியாது. அவர்கள் இதயத்தில் கனக்கும் துயரை இந்த தருணம் இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். அவர்களை எப்படி மீண்டும் எதிர்கொள்வது என்ற தயக்கத்துடன் தான் உள்ளே நுழைந்தேன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-was-moved-to-tears-mp-jothimani-posts




