Articolo completo
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான சி. விஜயபாஸ்கர் வரும் திங்கட்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயபாஸ்கர் இந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை இன்று மாலை நேரில் சந்தித்த விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜயை வரும் திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நேரில் சந்திக்கும் விஜயபாஸ்கர், அப்போது கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை ஈசிஆரில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் விஜயபாஸ்கருடன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் முன்னதாக, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர், அதிமுக தலைமையின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக மறைமுக அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். இதன் தொடர்ச்சியாகவே அவர் புதிய அரசியல் முடிவை எடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto




