சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கும் தவெக அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்திருந்தது. அமைச்சர் ஆனந்த் அமைச்சர் ஆனந்த் பேசுகையில், "முதல்வருக்கு எதை எப்போது பேச வேண்டுமெனத் தெரியும். நீங்கள் இரண்டரை வருடம் எங்களைப் பேசியதால்தான் நாங்கள் இன்று ஆட்சியில் இருக்கிறோம். திமுக ஆட்சியில் தவெகவுக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தீர்கள் என எனக்குதான் தெரியும். தலைவரின் கூட்டத்துக்கு காலையில் அனுமதி கொடுத்துவிட்டு மதியம் அனுமதி இல்லை என்பார்கள். எல்லா பக்கமும் பேச அனுமதி கொடுத்திருந்தால் 234 தொகுதிகளிலும் வென்றிருப்போம்" என்றார். உடனே பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, "தேர்தலுக்கு முன்பு நாங்கள் அவர்களைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஒரு கூட்டத்தில் கூட இவர்களை விமர்சனம் செய்யவில்லை. நாங்கள் பேசியதாக ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். எல்லா கட்சிகளைப் போலவும் இவர்களின் கூட்டத்துக்கும் சட்டப்பூர்வமாக அனுமதி கொடுத்தோம். உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையம்தான் அனுமதி குறித்த முடிவை எடுக்கும். அவர்களின் தலைவர் சில ஊர்களுக்குச் செல்லத்தான் செய்தார். கன்னியாகுமரிக்கெல்லாம் சென்றார். அங்கே தவெக வெல்லவே இல்லை. இது மெஜாரிட்டி இல்லாத அரசுதான். எங்களின் தயவால்தான் இந்த ஆட்சியே நடக்கிறது" என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ், "எங்களைப் பிரசாரம் செய்யவிடக் கூடாது என்பதற்காக SOP போட்டார்கள். 5000 பேருக்கு மேல் இருந்தால் 30 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்க சொன்னார்கள். காவல்துறையை தவெகவுக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள். எங்களைப் பற்றி பேசாததால்தான் இங்கே இருக்கிறீர்கள். பேசியிருந்தால் வீட்டில் இருந்திருப்பீர்கள்" என்றார். `காங்கிரஸ் கட்சி ஒன்றும் தவெக-வுக்கு அடிமை கிடையாது!' - முன்னாள் முதல்வர் நாராயணசாமி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/you-went-to-kanyakumari-did-you-even-win-one-constituency-udhayanidhi-vs-anand



