எந்த துறைமுகத்திலும் நிற்காமல், கடலில் தொடர்ச்சியாக 250 நாட்கள் பயணித்த அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் அப்ரகாம் லிங்கன், புதன்கிழமை தாய்லாந்தில் நங்கூரமிட்டது. தாய்லாந்தின் பட்டாயா நகருக்கு அருகே மேற்கொள்ளப்பட்ட இந்த நிறுத்தம், கப்பலில் இருந்த சுமார் 5,000 பேருக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு ஓய்வெடுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. பட்டாயாவில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் கேளிக்கை மையங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக, யுஎஸ்எஸ் அப்ரகாம் லிங்கன் கப்பலைச் சேர்ந்த சுமார் 5,000 கடற்படையினரில் பெரும்பாலானோர் கரைக்கு வந்த முதல் சில மணி நேரங்களிலேயே ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் காட்டினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy7z0631pepo




