முழு கட்டுரை
தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுவன் திடீரென காணாமல் போனார். போக்சோ சிறுவனின் பெற்றோரும், ஊர்க்காரர்களும் பல இடங்களில் தேடிய நிலையில் அதே பகுதியிலுள்ள பயன்பாடற்ற ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிறுவனின் சடலம் கிடந்தது. பின்பு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்யும் பிரகாஷ் என்ற இளைஞர் மீது சந்தேகம் வரவே பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், சிறுவனை பயன்பாடற்ற நீர்த்தேக்கத் தொட்டிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததையும், அந்த சம்பவம் குறித்து சிறுவன் வெளியில் தெரிவித்து விடுவார் என்ற அச்சத்தில் கொலை செய்து சடலத்தை தொட்டியிலேயே போட்டுவிட்டு வந்ததையும் பிரகாஷ் தெரிவித்தார். தூக்குத் தண்டனை! இதுதொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக தூக்கு தண்டனையுடன் ரூ.20 ஆயிரம் அபராதமும், கொலை செய்த குற்றத்துக்காக மற்றொரு தூக்கு தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இரு பிரிவுகளுக்கான அபராதம் கட்டத் தவறினால் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும், மேலும், இந்த சம்பவத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 201 மற்றும் 363 ஆகியவற்றுக்காக குற்றவாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
விரைவாகப் படிப்பதற்கான தமிழ் சுருக்கம் இது. முழு செய்தி, கூடுதல் சூழல், புதுப்பிப்புகளுக்கு அசல் வெளியீட்டாளரின் தளத்தைத் திறக்கவும்.
முழுக் கட்டுரை — கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும்




