கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக, கடுமையாக மோதிக்கொண்ட அமெரிக்காவும், ஈரானும் மூன்று நாள்களாகத் தாக்குதல்களை நிறுத்தியிருக்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடப்பதால்தான் இந்தப் போர் நிறுத்தம் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த நேரத்தில் ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் கேட்கையில், "நாம் அவர்களின் ராணுவத்தை ஏறக்குறைய அழித்துவிட்டோம். அவர்கள் நம்மைச் சந்திக்க விரும்புகிறார்கள், நாமும் சந்திக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஈரான் போர்அமெரிக்கா, ஈரான் தாக்குதல் திடீர் நிறுத்தம் ஏன்? ட்ரம்ப் - ஜே.டி.வான்ஸ் சந்திப்பு முக்கிய காரணம்? ஓர் உடன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது. அவர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலமாகவும் நேரடியாகவும் சந்திப்பைக் கோரினார்கள். நாமும் சந்திக்கிறோம். நல்ல விஷயங்கள் நடக்கக்கூடும். நாம் மோசமாகச் செயல்பட்டிருந்தால் அவர்கள் இந்தச் சந்திப்பைக் கோரியிருக்க மாட்டார்கள். நாம் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கி வருவதால் மட்டுமே அவர்கள் நம்மைச் சந்திக்க விரும்புகிறார்கள்" என்று கூறியிருக்கிறார். இதற்கு முன்பும் பல முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது. இருந்தும், இரு தரப்பிற்கும் மோதல் உண்டானது. இந்த முறையாவது பேச்சுவார்த்தை அமைதி ஒப்பந்தத்தில் சென்று முடிகிறதா என்பதை பார்ப்போம். Houthi Vs சவுதி அரேபியா - மத்திய கிழக்கில் இன்னொரு மோதல்; உலக பொருளாதாரத்திற்கு மீண்டும் ஆபத்து? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/trump-says-us-iran-talks-underway-after-three-day-pause-in-strikes




