டெல்லி, சகோதர - சகோதரி உறவை கொண்டாடும் பாரம்பரிய இந்து மதப்பண்டிகை ரக்ஷா பந்தன். இந்த பண்டிகை வட இந்தியாவில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக சகோதரிகள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்துகின்றனர். பள்ளிக்குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் இந்நிலையில், பள்ளிக்குழந்தைகளுடன் பிரதமர் மோடி இன்று ரக்ஷா பந்தனை கொண்டாடினார். பிரதமர் அலுவலகத்திற்கு வந்த பள்ளிக்குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தினர். பிரதமர் மோடி ஆண்டுதோறும் பள்ளிக்குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/school-children-tie-rakhi-on-pm-high-fives-him-on-raksha-bandhan




