தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியறை கிராமத்தில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்துச் சோதனைச்சாவடி மற்றும் அதிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இயங்கி வரும் தென்காசி மாவட்ட காவல்துறையின் சோதனைச்சாவடிகள் இனி ஒருங்கிணைந்து செயல்படவுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது கேரள மாநிலத்திற்கு செல்லும் அனைத்து வகையான வாகனங்களும் இந்த இரண்டு சோதனைச்சாவடிகளிலும் தனித்தனியாக தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குற்றால சீசன் காலங்களில் இந்த நெரிசல் மேலும் தீவிரமடைவதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. மேலும், அத்தியாவசிய பொருள்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களின் ஆவணங்களை இரு சோதனைச்சாவடிகளிலும் தனித்தனியாக சரிபார்த்து அனுமதி பெற வேண்டிய சூழல் காரணமாக, போக்குவரத்தில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையிலும், போக்குவரத்தை சீரமைக்கும் நோக்கிலும், புளியறை வட்டார போக்குவரத்துச் சோதனைச்சாவடி இனி தனியாகச் செயல்படாமல், அருகிலுள்ள காவல்துறை சோதனைச்சாவடியுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் செயல்படும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/puliyarai-checkposts-integrated-for-better-experience-of-public




