மேற்குவங்கத்தில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அதில் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ரெஜினகர் மற்றும் நந்திகிராம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ரெஜினகர் தொகுதியில் வென்ற ஹுமாயூன் கபீர் எம்.எல்.ஏ பதவி விலகியதை தொடர்ந்து காலியானது. நந்திகிராம் தொகுதியை முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். சுவேந்து அதிகாரி 9,665 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/by-election-in-west-bengal-will-mamata-banerjee-contest




