நெல்லை, நெல்லை மாநகரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ரூ.16 லட்சத்து 16 ஆயிரம் மோசடி நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேல் (வயது64). இவரது வாட்ஸ்-அப் எண்ணைத் தொடர்புகொண்ட மர்மப்பெண் ஒருவர், ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி மொத்தம் ரூ.16 லட்சத்து 16 ஆயிரத்தை ஏமாற்றி உள்ளார். கைது ஆனால் லாபத்தொகையோ அல்லது அசல் தொகையோ திரும்பக் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த அவர், நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-sub-inspector-defrauded-of-rs-16-lakh-4-arrested




