சென்னை, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக லயோலா மணியை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணியை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நியமனம் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமிக்கப்பட்ட லயோலா மணிக்கு முதல்-அமைச்சர் விஜய் நியமன ஆணையை வழங்கினார். தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில் தற்போது லயோலா மணியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் லியோனி இருந்தார். அதற்கு முன்னதாக அதிமுக ஆட்சி காலத்தில் பா.வளர்மதி பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/loyola-mani-appointed-as-the-president-of-tamil-nadu-textbook-association




