எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வருகிறார். விசிக விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் (ஜூலை. 5) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுக தலைமையே அறிவித்துவிட்டது. விசிக தலைவர் திருமாவளவன் இதுவரை நான் அறிவிக்கவில்லை. தவெக கூட்டணியில் இருக்கிறோமோ என்றும் அறிவிக்கவில்லை. ஒருவேளை தவெக தலைமையில் கூட்டணி உருவானால், அதில் இடம்பெறுவோம் அதில் எந்த ஐயமுமில்லை. திமுக தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விசிகவிலிருந்து ஒருவரை அழைத்து கட்சியில் இணைத்தபோது, திமுக தலைமையே எங்களுடன் உறவு இல்லை எனச் சொல்லிவிட்டது. விசிகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னது மு.க.ஸ்டாலின் தான்" என்று பேசியிருந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், "அமைச்சரவையில் சேர்ந்த உடனேயே நாங்கள் இன்னொரு கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று பொருளில்லை. மு.க. ஸ்டாலின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு தான் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தோம். அந்த வகையில் மு.க.ஸ்டாலினுடன் எங்களது நட்பு தொடர்கிறது. விசிகவில் அதிருப்தி அடைந்து விலகிய முன்னணி பொறுப்பாளரை திமுகவில் இணைத்தது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/vck-thirumavalavan-about-alliance-and-dmk




