ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுய உதவிக்குழுவினரின் உழவர் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் அங்காடியில் இன்று எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதும் உழவர் அங்காடியில் பணிபுரிந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், சமையல் பணிகளை செய்து கொண்டிருந்தபோது சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து தீப்பிடித்ததாக தகவல் தெரியவந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் உரிய நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், உழவர் அங்காடியில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/panic-ensued-following-a-fire-outbreak-at-the-farmers-market-operating-within-the-ramanathapuram-collectors-office-complex




